அதிமுக-வின் மூன்று குழுவினரும் பாஜக-வை ஆதரிப்பதில் மக்களை பாதுகாக்க தவறிவிட்டனர்- சிபிஐஎம் ஜி.ராமகிருஷ்ணன்

அதிமுகவில் உள்ள மூன்று கோஷ்டிகளுக்கு இடையே பாஜக-வை ஆதரிப்பதில் நிலவும் போட்டியில், தமிழக மக்களின் நலனை பாதுகாக்க தவறிவிட்டனர் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை, டவுன்ஹால் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

கதிராமங்கலத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மீது காவல் துறையினர் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன். சம்மந்தப்பட்ட காவல்துறைனர் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

ஜிஎஸ்டி-யினால் அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜிஎஸ்டி கார்பரேட்களுக்கு சாதகமாக அவசர அவசரமாக கொண்டு வரப்பட்டதாகும். 

அதிமுகவில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம், தினகரன் ஆகிய மூன்று கோஷ்டிகளுக்கு இடையே பாஜகவை ஆதரிப்பதில் போட்டி நிலவி வருகிறது. இதில் தமிழக மக்களின் நலனை பாதுகாக்க அதிமுக ஆட்சி தவறிவிட்டது. 

பசு பாதுகாப்பு என்ற பெயரில் நாடு முழுவதும் நடக்கும் வன்முறை சம்பவங்களுக்கு பாஜக, ஆர்எஸ்எஸ் வெறுப்பு பிரச்சாரமே காரணம். சிபிஎம் கட்சியின் கோவை மாவட்ட அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் சங்பரிவார் அமைப்புகளே ஈடுபட்டுள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். 

மேலும், பொய்யான கருத்துக்களை பரப்பி மத மோதல்களை உருவாக்க சங்பரிவார் அமைப்புகள் முயற்சித்து வருகிறது. தமிழக சட்டப்பேரவையில் சாதி ஆணவப்படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும். லோக் ஆயுக்தா மசோதாவை இயற்ற வேண்டும். மத்திய அரசு தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய 17 ஆயிரம் கோடி ரூபாயை பெற தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்" இவ்வாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பேசினார்.

Newsletter

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...