கோத்தகிரி அருகே டாஸ்மாக் கடையினை அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டம்

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள தவிட்டுமேடு பகுதியில் புதியதாக திறக்கப்பட்டுள்ள மதுபானக் கடையை அகற்றக் கோரி அப்பகுதி மக்கள் இன்று டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



தவிட்டுமேடு பகுதியில் சுமார் 300-க்கும் மேற்ட்ட குடும்பங்களாக மக்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் தண்ணீர், சாலை, கழிப்பிட வசதி என எந்தவொரு அடிப்படை வசதிகளும் இல்லாமல் பல வருடங்களாக திறந்த வெளியில் மலம் கழித்து வருவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. இது குறித்து அரசுக்கு பலமுறை மனுக்கள் கொடுத்தும் இது நாள் வரையில் எந்தவொரு அடிப்படை வசதிகளும் செய்து தராமல் மாவட்ட நிர்வாகம் அலைகழித்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். 



இந்நிலையில், தவிட்டுமேடு பகுதியில் மாவட்ட நிர்வாகத்தால் திடீரென டாஸ்மாக் மதுபானக் கடை திறக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்மாக் கடையின் அருகாமையில் பள்ளி மற்றும் அங்கன்வாடி உள்ளது. இதனால், டாஸ்மாக் மதுபானக் கடையினை உடனடியாக அகற்றி, அந்த கடையின் கட்டிடத்தை கழிப்பறையாக மாற்றி அமைக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் முழக்கங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டனர்.

Newsletter

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...