பிறப்பு, இறப்பு சான்றிதல்களை இணையதள முகவரியின் மூலம் பெற்றுக்கொள்ளலாம்- மாநகராட்சி ஆணையர்

கோவை மாநகராட்சியில் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதல்களை இணையதள முகவரியின் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

கோவை மாநகராட்சி பிறப்பு, இறப்பு பதிவறை - கோவை மாநகராட்சி பிறப்பு, இறப்பு பதிவறையில் 1871 முதல் 2015-ம் வருடம் வரையிலான பிறப்பு, இறப்பு பதிவேடுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. 2011-ம் வருடம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட நகராட்சி, பேரூராட்சிகள் பிறப்பு, இறப்பு பதிவேடுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. 

2016 மற்றும் 2017-ம் வருடத்தில் பிறப்பு, இறப்பு பதிவேடுகள் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டு அலுவலகங்களில் பராமரிக்கப்பட்டு வருகிறது. பிறப்பு, இறப்பு பதிவு சம்பந்தமான சான்றிதழ்கள் கோவை மாநகராட்சியின் பழைய 72 வார்டுகளில் இருந்து 1981 முதல் 2015 வரையிலான பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் (www.ccmc.gov.in) இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும், 2011-ம் வருடம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட நகராட்சி பேரூராட்சிகள் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் 2011 முதல் 2015 வரையிலான வருடத்திற்குண்டான சான்றிதழ்கள் (www.ccmc.gov.in) இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

எனவே, பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் 1981 முதல் 2015 வரையிலான வருடங்களுக்கான சான்றிதழ்கள் இணையதள முகவரியில் பெற்றுக் கொள்ளலாம். பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் வேண்டுவோர் தபால் தலை ஒட்டிகள் (Self Enveloped Cover) இணைத்து விண்ணப்பித்தால் தபால் மூலம் அனுப்பப்படும். மேலும், பிறப்பு, இறப்பு சான்றிதழ் கூரியர் மூலம் வேண்டும் என விண்ணப்பித்தால் கூரியர் தபால் மூலம் சான்றிதழ்கள் அனுப்பப்படும். 

கோவை மாநகராட்சி பிறப்பு, இறப்பு பதிவு மற்றும் சான்றிதழ்கள் அனைத்தும் சிஎம்ஏ அலுவலக மென்பொருள் கொண்டு பயன்படுத்துவதில்லை. கோவை மாநகராட்சிக்கென தனியான மென்பொருள் பயன்படுத்தப்பட்டு வருகிறது என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.

Newsletter

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...