குன்னூரில் கன மழை - விவசாயம் அதிகரிக்கும் என மக்கள் மகிழ்ச்சி

உதகைக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால், அப்பகுதி மக்களும் சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம், உதகை, கோத்தகிரி, குன்னூர், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் பருவமழை தொடக்கத்தின் காரணமாக பரவலாக இரவு, பகல் என மழை பெய்து வருகிறது. 

உதகைக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று பகலில் மழை பெய்யத் துவங்கியதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

இதுகுறித்து, குன்னூர் பகுதிவாசி ரவி என்பவர் கூறுகையில், குன்னூருக்கு உட்பட்ட விவசாய நிலங்களில் அதிகப்படியாக காய்கள் பயிரிடப்பட்டுள்ளன. தற்போது பெய்யும் பருவமழை விவசாயம் செழிக்க மிகவும் அவசியமாகும். மழையின் காரணமாக விளைச்சல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும், பல பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து காணப்பட்டது. ஆனால், தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது" என தெரிவித்தார்.

Newsletter

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...