கதிராமங்கலம் மக்கள் மீதான தடியடிக்கு தமிழக முதலமைச்சரின் பதில் பொறுப்பற்றதாக உள்ளது- நாம் தமிழர் சீமான்


கோவை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-



கதிராமங்கலத்தில் போராடிய பொது மக்கள் மீது காவல் துறை தடியடி நடத்திய விவகாரத்தில் தமிழக முதலமைச்சரின் பதில் பொறுப்பற்றதாக உள்ளது. வாழ்வாதார பிரச்சனைகளுக்காக போராடும் மக்களுக்கு அரசு துணை நிற்காமல் நேர் எதிராக செயல்படுகின்றது. கதிராமங்கலத்திற்குள் தங்களை நுழைய விடவில்லை என்றாலும் மற்ற இடங்களில் நாங்கள் போராடுவோம். பொது கூட்டங்களில் இதுகுறித்தான கோரிக்கைகளை முன்வைப்போம்.

ஜிஎஸ்டி வரியால் பாதிக்கப்பட்டு வேலை நிறுத்தம் மேற்கொண்டு வரும் திரையரங்க உரிமையாளர்களின் பிரச்சனையில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். டிடிஎச் மூலம் திரைப்படங்களை  தமிழக அரசே முன்நின்று வெளியிட வேண்டும். டிடிஎச் மூலம் படங்கள் வெளியிட்டால் அதில் பல முறைகேடுகள் அதிகரிக்க வாய்ப்பிருக்கின்றது. ஏற்கனவே இயக்குனர் சேரன் முயற்சித்தும் இந்த முயற்சி பலன் அளிக்கவில்லை.

கொடநாட்டில் நடைபெறும் சம்பவங்கள் திகில் படம் போல் போய்க்கொண்டு இருக்கிறது. பத்திரிகைகளில் படிக்க சுவாரஷ்யமாக இருக்கிறது. மேலும், ஜெயலலிதா இருந்த போது இருந்ததை விட தற்போது தமிழக அமைச்சர்கள் சிறப்பாக செயல்படுகின்னர். பொது வெளியில் தைரியமாக பேசுகின்றனர்."

இவ்வாறு நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

Newsletter

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...