கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்களின் குடும்பத்திற்கு அரசு உதவி செய்யக்கூடாது- ராஷ்ட்ரீய ஹிந்து பரிஷத்


கோவையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்களின் குடும்பத்திற்கு அரசு எவ்வித உதவியும் செய்யக்கூடாது என்று கோரி ராஷ்ட்ரீய ஹிந்து பரிஷத் அமைப்பினர் இன்று கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் கோவை மாநகர காவல் ஆணையர் ஆகியோரிடம் மனு அளித்தனர்.

இது குறித்து ராஷ்ட்ரீய ஹிந்து பரிஷத் அமைப்பின் நிறுவனர் ஜலேந்தரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது :-

கோவையில் கடந்த 1997-ம் ஆண்டு நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் 60-க்கும் மேற்ப்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். ஆனால், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இதுநாள் வரையில் அரசு எவ்வித நிவாரண நிதியும் வழங்கவில்லை. இந்த நிலையில், குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய நபர் ஒருவர் உடல் நலக்குறைவால் சிறையிலேயே உயிரிழந்தார். ஆனால், கோவை மாநகராட்சி சார்பில் அந்த நபரின் குடும்பத்திற்கு உக்கடம் பகுதியில் தொழில் துவங்க அரசு ஏற்பாடு செய்துள்ளது.

குண்டுவெடிப்பில் பலியானோர் குடும்பத்திற்கு எந்த நிவாரணமும் வழங்காத அரசு, குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்களின் குடும்பத்திற்கும் எவ்வித நிவாரணமும் வழங்க கூடாது'. 

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...