கோவை மதுக்கரை அருகே உடல்நலம் குன்றிய நிலையில் சுற்றிதிரிந்த சிறுத்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.


கோவை மதுக்கரையொட்டிய பகுதியில் தொடர்ச்சியாக யானையின் நடமாட்டம் இருந்து வந்த நிலையில், அவ்வப்போது சிறுத்தையின் நடமாட்டம் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், மதுக்கரை பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றின் வளாகத்தில் தள்ளாடிய நிலையில் சுற்றிய சிறுத்தையை கண்ட பொதுமக்கள்  வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். பொது மக்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த வனத்துறையினர் சிறுத்தையின் நடமாட்டத்தை தீவிரமாக கண்கானித்த கொண்டிருந்த சில நிமிடங்களிலேயே சிறுத்தை மயங்கி விழுந்தது.



இதனை அடுத்து, வனத்துறையினர் தண்ணீரில் நனைத்த துணியை கொண்டு சிறுத்தையை சுற்றி வனத்துறையினரின் வாகனம் மூலம் மதுக்கரை அடுத்துள்ள இந்திய கடற்படை வீரார்களின் துப்பாக்கி சுடும் பயிற்சி மைய வளாகத்திற்கு கொண்டு சென்றனர்.வனத்துறை மருத்துவர்களின் சிகிச்சைக்காக காத்திருந்த நிலையிலேயே சிறுத்தை உயிர் இழந்தது. 

நகரத்தையொட்டிய பகுதியான மதுக்கரையில் சிறுத்தையின் நடமாட்டம் இருந்துள்ளதும் அது மரணமடைந்தது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிகரன் அங்கு சென்று வனப்பாதுகாவலர்களிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து வனத்துறை மருத்துவர் மனோகரன் சிறுத்தை இறந்த இடத்திலேயே பிரேத பரிசோதனை மேற்கொண்டு அங்கேயே புதைக்கப்பட்டது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...