அரசின் கொள்கைகளையும் திட்டங்களையும் முறையாக செயல்படுத்துவேன்: கோவை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி பேட்டி

கடந்த 3-ம் தேதி தமிழக காவல் துறை அதிகாரிகள் 46 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, கோவை மாவட்ட கண்காணிப்பாளராக பணியாற்ற வந்த ரம்யபாரதி சென்னை பொருளாதார குற்றப்பிரிவு துணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டார்.



தொடர்ந்து, கோவை மாநகரில் தலைமையக காவல் துணை ஆணையராக மூர்த்தி நியமிக்கப்பட்டார். இன்று அவர் கோவை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கோப்புகளில் கையொப்பமிட்டு பதவியேற்றுக்கொண்டார். காவல்துறை அதிகாரிகளும், அரசு அதிகாரிகளும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். 



தொடர்ந்து, மாவட்ட கண்காணிப்பாளர் மூர்த்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், 'கோவை மாவட்ட கண்காணிப்பாளராக பொறுப்பேற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். கோவை எனக்கு முன்னதாகவே நன்கு தெரிந்த மாவட்டம். அதனால், சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து போன்ற பல்வேறு பிரச்சனைகளிலும் சிறப்பு கவனம் செலுத்தி சிறப்பாக செயல்படுவேன். மேலும், அரசின் கொள்கைகளையும், திட்டங்களையும் முறையாக செயல்படுத்துவேன்' இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...