தி வெஸ்டெர்ன் காட்ஸ் பள்ளியின் சார்பில் "வன மஷோத்சவ்" மரம் நடும் விழா கொண்டாட்டம்

தி வெஸ்டெர்ன் காட்ஸ் சர்வதேச பள்ளியின் இயற்கை மன்றத்தின் சார்பில் "வன மஹோத்சவ்" எனப்படும் மரம் நடும் விழா கொண்டாடப்பட்டது. பள்ளித் தாளாளர் ஹேமலதா சசிகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 8ம் வகுப்பு மாணவி சம்யுக்தா எஸ்.சாம்ராஜ் வரவேற்புரையாற்றினார்.



கோவை பசுமை இயக்கத்தின் நிர்வாகிகள் சுஜாதா, ராம்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். காணோலி காட்சி மூலம் மரங்களின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு விருந்தினர்கள் எடுத்துரைத்தனர். 

சிறப்பு விருந்தினர்கள் மற்றும் இயற்கை மன்ற உறுப்பினர்கள் பள்ளி வளாகத்தில் 60 மரக்கன்றுகளை நட்டனர். மேலும், இயற்கை காய்கறி தோட்டத்தில் காய்கறி விதைகளை விதைத்தனர்.

இந்நிகழ்வின் ஒரு பகுதியாக, இயற்கை மன்ற மாணவர்கள் தாங்கள் கொண்டு வந்த மரக்கன்றுகளை தங்களுக்குள் பரிமாறிக் கொண்டனர். விருந்தினர் முன்னிலையில் மரக்கன்றுகளை வைத்து பராமரிப்போம் என மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். 

நிறைவாக, நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் 8ம் வகுப்பு மாணவி மெலோடிகா விஜயன் நன்றியுரை வழங்கினார்.

Newsletter

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...