கதிராமங்கலத்தில் போராடும் மக்களுக்கு ஆதரவாக கோவையில் புரட்சிகர இளைஞர் முன்னணி ஆர்ப்பாட்டம்- கைது

தஞ்சாவூர் மாவட்டம், கதிராமங்கலத்தில் 12 இடங்களில் ஓஎன்ஜிசி நிறுவனம் எண்ணெய் எடுத்து வருகிறது. இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக எண்ணெய் கொண்டு செல்லப்படும் குழாய்களை பராமரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் கடந்த இரண்டு மாதங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், கதிராமங்கலம் பகுதியில் குழாய்களில் இரு நாட்களுக்கு முன்பு எண்ணெய் கசிவு ஏற்பட்டது. தொடர்ந்து அதில் தீபற்றியும் எரியத்துவங்கியது.

இதனால் ஆவேசமடைந்த மக்கள் உடனடியாக கதிராமங்கலத்தில் பதிக்கப்பட்டுள்ள ஓஎன்ஜிசி-யின் குழாய்களை அகற்ற வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையில் மக்கள் கலைந்து செல்ல மறுத்ததையடுத்து பொதுமக்களின் மீது காவல்துறையினரால் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும், சிலர் கைது செய்யப்பட்டனர். இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும், அமைப்புகளும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.



அதன்படி, இன்று கோவை மாவட்ட தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு புரட்சிகர இளைஞர் முன்னணியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், கதிராமங்கலத்தில் கைது செய்யப்பட்டுள்ள பொதுமக்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும், ஓஎன்ஜிசி குழாய்களை அகற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

இதுகுறித்து புரட்சிகர இளைஞர் முன்னணியைச் சேர்ந்த கண்மணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழக அரசு பணத்திற்காகவும், பதவிக்காகவும் மத்திய அரசிடம் பணிந்து செயல்பட்டு வருகிறது. அதேநேரத்தில் மத்திய அரசு மக்கள் எந்த உணவை உட்கொள்ள வேண்டும். எதை பயன்படுத்த வேண்டும் என அனைத்து அடிப்படை உரிமைகளையும் பறித்து வருகிறது. மத்திய அரசின் அனைத்து மக்கள் விரோத நடவடிக்கைகளையும் தமிழக அரசு கைகட்டி வேடிக்கை பார்க்கிறது.



கதிராமங்கலம் மக்கள் மீது காவல்துறையினரைக் கொண்டு கொலைவெறித் தாக்குதல் நடத்தியது தமிழக அரசே. கதிராமங்கலத்தில் போராடிய ஜெயராமன் போன்றோரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். ஓஎன்ஜிசி நிறுவனத்தால் பதிக்கப்பட்டுள்ள குழாய்கள் அனைத்தையும் நீக்க வேண்டும்" என்றார்.

இதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 20-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

Newsletter

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...