பொறியியல் கல்லூரி மாணவர்கள் அறையில் வெடிபொருட்கள்- காவல்துறையினர் விசாரணை



கோவையில் பொறியியல் கல்லூரி மாணவர்கள் தங்கி இருந்த அறையில் வெடி பொருட்கள் இருந்ததால், அவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர் தொடர்ந்து மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை அடுத்துள்ள கோவைபுதூரில் ஏராளமான மாணவர்கள் கல்லூரி அருகே வீடு வாடகைக்கு எடுத்து தங்கி படித்து வருகின்றனர். இதில், அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் பொறியியல் மாணவர்களும் இவ்வாறான வீடுகளில் தங்கியிருந்த நிலையில், அவர்களது வீட்டிற்கு புதிது புதிதாக சில நபர்கள் வந்து சென்றுள்ளனர்.

இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி பொதுமக்கள் அப்பகுதீ காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து மாணவர்கள் தங்கியிருந்த பகுதிக்கு விசாரணைக்காக காவல்துறையினர் வந்த நிலையில்,காவல்துறையினரைக் கண்ட  நபர்கள், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதனை தொடர்ந்து மாணவர்கள் தங்கியிருந்த அறையை போலீசார் சோதனையிட்ட போது, பெரிய அளவிலான பட்டாசுகள் ஒரு பையில் நிறைய இருப்பதும், அவற்றின் மேலே வெடி பொருட்கள் போல கயிற்றில் சுற்றி இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

அதனை பறிமுதல் செய்த குனியமுத்தூர் காவல்துறையினர் அறையில் தங்கி இருந்த 3 பொறியியல் மாணவர்களிடம் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர். மேலும், அந்த பொருட்கள் வெடி குண்டு நிபுணர்கள் மற்றும் தடய அறிவியல் துறையினரிடம் சோதனைக்காக அனுப்பப்பட்டதை தொடர்ந்து ஆய்வுகள் செய்யப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...