கடினமான அறுவை சிகிச்சையை முதலமைச்சர் காப்பீட்டில் செய்து சாதனை படைத்த பிஎஸ்ஜி மருத்துவமனை மருத்துவர்கள்

பொள்ளாச்சியைச் சேர்ந்த 55 வயது நபர் ஒருவர் மூச்சுக் கோளாறு காரணமாக கடந்த ஜூன் 28ம் தேதியன்று கோவை பிஎஸ்ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது இரத்தக் குழாயில் இரத்தம் வெளியேறிவருவதை கண்டறிந்தனர்.

பின், அந்த இரத்தக் குழாயினை மாற்ற வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இதில், இரண்டு குழாயில் ஒரு குழாய் மட்டுமே செயல்பட்டு வந்தது. மற்றொரு குழாய் செயல்படாமல் இருந்துள்ளது. பின், இரத்தம் வெளியேறிவந்த குழாய் சிகிச்சை மூலம் மாற்றப்பட்டது. 

பெண்டல் எனப்படும் இந்த சிகிச்சை பிஎஸ்ஜி மருத்துவமனையின் சிடிவிஎஸ் குழுவினர் தமிழக முதலமைச்சரின் மருத்துவக் காப்பிட்டுத் திட்டத்தின் கீழ் செய்து சாதனை படைத்துள்ளனர். 5 மணி நேரம் நடைபெற்ற இந்த சிகிச்சைக்குப் பின் அந்த நபர் பூரண குணமடைந்தார். 

தொடர்ந்து, ஒருவாரகாலம் மருத்துவக் கண்காணிப்பில் இருந்த நபர் இன்று நல்ல நிலையில் வீடுதிரும்பினார்.

இந்த பெண்டல் சிகிச்சை 500-யில் இருந்து ஆயிரம் இதய சிகிச்சையில் ஏதேனும் ஒன்றே வரும். இதுபோன்று 10-க்கும் மேற்பட்ட சிகிச்சைகள் பிஎஸ்ஜி மருத்துவர்களால் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தொடர்ந்து கண்காணிப்பிலும் இருந்து வருகின்றனர். 

இந்த சிகிச்சை குறித்து மேலும், தகவலுக்கு பிஎஸ்ஜி மருத்துவமனை, சிடிவிஎஸ் துறை பேராசிரியர், தலைவர் மருத்துவர் பி.ஆர்.முருகேசன் என்பவரை அணுகலாம்.

Newsletter

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...