சிம்ப்ளிசிட்டி செய்தி எதிரொலி: பொது இடத்தில் மது அருந்திய நான்கு பேர் மீது வழக்கு

நெடுஞ்சாலையில் இருக்கும் டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, கோவையின் முக்கிய இடங்களில் இருந்த பல்வேறு டாஸ்மாக் பார்கள் மூடப்பட்டன. 



இதனால், ஊருக்கு நடுவே இருக்கும் டாஸ்மாக் பார்களுக்கு படையெடுத்த மது பிரியர்கள் பொது இடங்களிலேயே வைத்து மதுவை அருந்துவதும் பின்னர் காலி பாட்டில்களை சாலைகளில் எரிவதையும் வழக்கமாக கொண்டிருந்தனர். 

ஜி.வி ரெசிடென்சி சந்திப்பில் இருக்கும் டாஸ்மாக் பார் முன்பு உள்ள காலி மைதானத்திலும், அதன் சுற்று வட்டாரப்பகுதிகளிலும் பலர் கூட்டாக அமர்ந்து மது அருந்துவதோடு, கண்ணாடி பாட்டில்களை சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மீது வீசிச்செல்வதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியதையடுத்து சிம்ப்ளிசிட்டியில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.



இதன் தொடர்ச்சியாக நேற்று மாலை சிங்காநல்லூர் போலீசார் அப்பகுதிகளில் ரோந்து சென்றனர். அப்போது ஜி.வி.ரெசிடென்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அமர்ந்து மது அருந்தி வந்தவர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது, மசக்காளி பாளையம் பகுதியைச் சேர்ந்த தர்மராஜ் (36), சிவக்குமார் (37), சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த வரதராஜன் (40) மற்றும் சுரேஷ் (35) ஆகிய நான்கு பேர் மீது பொது இடத்தில் மது அருந்தியதாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Newsletter

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...