கோவை ஆட்சியர் தலைமையில் எரிவாயு முகவர்கள், விநியோகஸ்தர்கள் அமைப்புகளுடனான ஆலோசனைக் கூட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட வழங்கல் துறையின் மூலம் எரிவாயு விநியோகம் செய்யும்போது நுகர்வோர்களின் குறைகளை களைவது தொடர்பாக எரிவாயு முகவர்கள், விநியோகஸ்தர்கள், எண்ணை நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் இன்று நடைபெற்றது.



இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில், நுகர்வோர்கள் சமையல் எரிவாயு பயன்படுத்தும்பொது பாதுகாப்பு காரணிகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். எரிவாயு உருளையின் எடை மற்றும் அதில் எரிவாயு கசிவு இல்லாமல் இருப்பதை பரிசோதிக்க வேண்டும். கிராமப்புறங்களில் எரிவாயு உருளைகள் வீடுகளுக்கு சென்று வழங்கப்படாமல், ஒரு பொதுவான இடத்தில் வைத்து விநியோகிக்கப்படுவதால், வீட்டு உபயோக எரிவாயு உருளைகள் முறைகேடாக பயன்படுத்துகிறார்கள். அதற்கு 5 எரிவாயு உருளைகள் வரை மற்றும் 100 கிலோ எடை வரையிலும் பொதுவான இடத்தில் வைத்து விநியோகிக்க வேண்டும்.

நகர்புறங்களில் உணவு விடுதிகள் மற்றும அடுமனைகளில் எரிவாயு உருளைகள் முறைகேடாக பயன்படுத்துவதை கண்காணித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கவேண்டுமென எண்ணெய் நிறுவனங்களுக்கும், எரிவாயு முகவர்களுக்கும் அறிவுறுத்துகிறேன். 

மேலும் எரிவாயு விநியோகம் செய்யும் போது எரிவாயு உருளையின் மதிப்பிற்கு மேல் தொகை வசூலிக்க கூடாது. அனைவரும் அடையாள அட்டை அணிய வேண்டும். ஆதார் அட்டை வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டிருப்பதால் ஒவ்வொரு மாதமும் சமையல் எரிவாயு மானியம் வெவ்வேறு கணக்குகளில் சேர்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்ட புகாருக்கு சமீபத்தில் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் மானியம் சேர்க்கப்பட வேண்டும்.

எரிவாயு உருளை வாங்கும்போது கேஸ் அடுப்பு, மிக்ஸி போன்ற பொருள்களையும் சேர்த்து வாங்க வேண்டும் என நுகர்வோர்கள் கட்டாயப்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்ட புகாருக்கு, அதனை சரி செய்து கொள்ள வேண்டும். பல அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போருக்கு மத்திய அரசின் விதிமுறைகளின்படி எரிவாயு உருளை விநியோகம் செய்யவேண்டும்" என்றார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணமூர்த்தி, மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளர் கணேசன், நுகர்வோர்கள், எரிவாயு முகவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...