திமுக சார்பில் வழக்கறிஞர்களுக்கான பயிற்சி பட்டறை துவக்கம்

கோவை திமுக சார்பில் வழக்கறிஞர்களுக்கான பயிற்சி பட்டறை கவுண்டம்பாளையத்தில் உள்ள கல்பனா திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக திமுக அமைப்புச் செயலாளரும், பாராளுமன்ற நியமனக்குழு உறுப்பினருமான எஸ்.ஆர் பாரதி கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் எனவும், மத்தியில் ஆளும் பாரத ஜனதா கட்சி எப்போது வேண்டுமானாலும் தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஆட்சியை கலைக்க நேரிடலாம் எனக் கூறினார். மேலும் தற்போது தமிழ்நாட்டில் நடைபெற்றுவரும் அஇஅதிமுக ஆட்சியை பாரத ஜனதா கட்சி கட்டுபாட்டுடன் நடைபெற்று வருவதாக குற்றம்சாட்டயுள்ளார். முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் கொடநாட்டில் நடைபெற்ற சம்பவங்களை மறைப்பதற்காக பாரத ஜனதா கட்சி தமிழகத்தில் டி.ஜி.பி ராஜேந்திரனை பணிநீக்கம் செய்யப்பட்டதாக கூறினார். இதற்கு எதிராக திமுக சார்பில் உயர்தீதி மன்றத்தில் வழக்கு தொடரப்படும் எனவும் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் கண்ணப்பன், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விடுதலை விரும்பி, கோவை மாநகர வடக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி மற்றும் திமுக உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...