இளைஞர் திறன் தின விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் கோவையில் நாளை துவக்கம்

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 15ம் தேதி இளைஞர் திறன் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஜூலை 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை திறன் வாரமாக கொண்டாடப்பட வேண்டும் என தமிழக அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட மாணவ, மாணவியர்களும், இளைஞர்களும் திறன் பயிற்சி பெறுவதன் மூலம் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள உதவிடும் வகையிலும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் இவ்வாரத்தில் பல்வேறு நிகழ்ச்சியை மாவட்ட வேலைவாப்பு அலுவலகமும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

முதல் நாள் நிகழ்ச்சியாக 10ம் தேதியன்று (நாளை) மாவட்ட ஆட்சியர் அலுவலகம், இம்மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் திறன் பயிற்சி குறித்து விரிவாக விளக்கப்பட்டு, திறன் பயிற்சிக்கான பதிவுகள் இலவசமாக மேற்கொள்ளப்படும். மேலும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு சிறந்த எதிர்காலம் அமைய திறன்பயிற்சி என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, வினாடி வினா, ஓவியப் போட்டி ஆகியன நடத்தப்பட்டு அதில் வெற்றிபெறுபவர்களுக்கு நிகழ்ச்சியின் இறுதிநாளான ஜூலை 15ம் தேதியன்று மாவட்ட ஆட்சியரால் பரிசுகள் வழங்கப்படும். 

இவ்வாரத்தில் பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளில் திறன் விழிப்புணர்வு குறித்து ஏராளமான நிகழ்ச்சிகளை நடத்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது. திறன் பயிற்சி குறித்து விரிவாக அறியவும், பதிவு செய்யவும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தையும் நேரில் அணுகி பயனடையலாம். இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி திறன் பயிற்சி பெற்று பயனடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...