மதுக்கரையில் முறைகேடாக விற்கப்படும் மதுபானங்கள்- பொதுமக்கள் அவதி

இந்தியா முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளையும், பார்களையும் கடந்த மார்ச் 31-ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஏப்ரல் 1-ம் தேதிக்குப் பிறகு புதிய மதுக்கடைகளை திறக்க அனுமதிக்கக்கூடாது என்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, கோவை மாவட்டத்தில் இவ்வாறாக செயல்பட்டு வந்த நூற்றுக்கும் மேற்பட்ட மதுபானக் கடைகள் மூடப்பட்டன. மேலும், பல கடைகள் இடமாற்றம் செய்யப்பட்டு குடியிருப்பு பகுதிகளில் மாற்றப்பட்டன. இந்நிலையில், சிலர் மதுபானங்களை முறைகேடாக விற்பனை செய்துவருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

குறிப்பாக, கோவை மாவட்டம், மதுக்கரைக்கு உட்பட்ட பகுதியில் நீதிமன்ற தீர்ப்பை அடுத்து மூடப்பட்ட டாஸ்மாக் கடை, அதன் எதிரே உள்ள பெட்டிக் கடை உள்ளிட்டவற்றில் மதுபானங்கள் தற்போது அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

முன்புறம் மூடிய நிலையில் உள்ள இந்த டாஸ்மாக் கடையின் பின் வாசல் பகுதியிலும், அருகிலும் சிலர் முறைகேடாக மதுபானங்களை விற்பனை செய்து வருகின்றனர். இந்த மதுக்கடையின் எதிரே உள்ள பெட்டிக் கடையிலும், சிலர் குடியிருப்பு பகுதிகளுக்குச் செல்லும் சாலையிலும் அமர்ந்து மதுபானங்களை விற்பனை செய்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும், காலை 6 மணி முதல் இரவு 10 மணி, அதற்கு மேலும் விற்பனை நடைபெறுவதாகவும், மதுக்கடையினை விட வெளியில் கூடுதலாக விலை வைத்து விற்பனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இப்பகுதியில் மதுகுடிக்க வருவோரால் அன்றாடம் பெண்கள், பள்ளி செல்லும் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து மதுக்கரை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அனால், எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுவதில்லை. தொடர்ந்து, இதுபோன்ற முறைகேடான மதுபான விற்பனை நடைபெற்றால் அடுத்தகட்டமாக மாவட்ட காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்படும்' என தெரிவித்தனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...