சுகாதர வசதியின்றி பாதிக்கபடுவதாக உடலில் கொசு வலை போர்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு

சுகாதார வசதியின்றி பாதிக்கபட்டு வருவதாகக் கூறி தமிழ் புலிகள் கட்சியினர் இன்று உடலில் கொசு வலை போர்தியபடி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்ததால் சிறிது நேரம் ஆட்சியர் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை மாநகராட்சி 16-வது வார்டு ராஜீவ்காந்தி நகர் பகுதியில் 350-ம் மேற்பட்ட குடும்பங்களாக மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இப்பகுதியில் வசித்து வரும் மக்களுக்கு அடிப்படை வசதிகள் தொடர்ந்து மறுக்கபட்டு வருவதாக இன்று தமிழ் புலிகள் அமைப்பினர் குற்றம் சாட்டி உள்ளனர். 

இது குறித்து தமிர் புலிகள் அமைப்பினர் கூறுகையில், தங்கள் பகுதியில் உள்ள பொது கழிப்பிட செப்டிக் டேங் நிரம்பி வழிந்து வீதிகளில் ஓடுகிறது. இது குறித்து புகார் அளித்தும் கடந்த 4 மாதங்களாக மாநகராட்சி நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இப்பகுதியில் வசிப்பவர்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் ஏற்பட்டு வருகிறது. 

மேலும், வீதிமுழுவதும் துர்நாற்றம் வீசுவதால் குடியிருக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி சுகாதார அதிகாரிகளிடம் இது தொடர்பாக மனு அளித்தால் அலட்சிய போக்குடன் நடந்து கொள்கின்றனர். மாவட்ட ஆட்சியர் உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காகவே, ஆட்சியரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உடலில் கொ வலையினை போர்த்தியபடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்துள்ளோம்' என தெரிவித்தனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...