அரசு அதிகாரிகள் ஊழல் புகார் மீது நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியரிடம் ஊழல் எதிர்ப்பு அமைப்பினர் கேள்வி

அரசு அதிகாரிகள் ஊழல் செய்வதாக நான்கு மாதங்களுக்கு முன்பு ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் சார்பாக புகார் அளித்ததிற்கு என்ன நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது என மாவட்ட ஆட்சியரிடம் ஊழல் எதிர்ப்பு அமைப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கோவை மாவட்ட நிர்வாகத்தில் கட்டுப்பாடற்ற வெளிப்படையான ஊழல் நடைபெறுவதாகவும், அதனை தடுக்க வலியுறுத்தியும் கடந்த மார்ச் 6ம் தேதியன்று ஊழல் தடுப்பு இயக்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. மனு கொடுத்து 4 மாதங்களுக்கு மேல் ஆகியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கோரி இன்று ஊழல் தடுப்பு இயக்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் வந்து புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பினர்.

அப்போது, ஊழல் புகார்கள் குறித்து விசாரிப்பதற்கு தனி அலுவலகம் உள்ளது என்றும் அதனை அணுகுமாறும் மாவட்ட நிர்வகத்தால் ஊழல் தடுப்பு இயக்கத்தினருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இதனால் அதிருப்தி அடைந்த ஊழல் தடுப்பு இயக்கத்தினர், நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக பேசுவதாக மாவட்ட ஆட்சியர் மீது அதிருப்தி தெரிவித்தனர். மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தினம்தோறும் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வந்து தங்களுடைய குறைகளை சொல்லும் நிலையில், சாதாரண பொதுமக்கள் கொடுக்கும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்றும் கேள்வி எழுப்பினார். மேலும், மாவட்ட நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைகள் வெளிப்படைத்தன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...