நடிகர் தலைவாசல் விஜய் வீட்டில் கொள்ளை


நடிகர் தலைவாசல் விஜய்க்கு சொந்தமாக கோவை துடியலூரை அடுத்த தொப்பம்பட்டி பகுதியில் வீடு உள்ளது. இந்த வீட்டில் வசித்து வருபவர் ராஜேந்திரன் (27). ‘லிப்ட்’ தயாரித்து நடத்தி வரும் இவர் நேற்று மாலை வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் தனது நிறுவனத்திற்கு சென்றார்.

இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், வீட்டின் முன்பக்க கதவை கதவை உடைத்து உள்ளே சென்றனர். மேலும், அலமாரியில் இருந்த ரூ.50 ஆயிரம் பணம் மற்றும் 5 சவரன் எடையுள்ள தங்க சங்கிலி மற்றும் மோதிரங்களை கொள்ளையடித்து சென்றனர்.

நிறுவனத்திலிருந்து வீடு திரும்பிய போது இக்கொள்ளை சம்பவம் நடந்தது ராஜேந்திரனுக்கு தெரிவந்துள்ளது. தொடர்ந்து அவர் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த துடியலூர் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு  செய்தனர்.

மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது கொள்ளை நடந்த வீட்டில் இருந்து 2 கைரேகைகள் கண்டெடுக்கப்பட்டது.

தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...