நீலகிரியில் பிரத்யேக விழிப்புணர்வு அரங்கினை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்

நீலகிரி மாவட்டம் உதகை சேட் நினைவு அரசு மகப்பேறு மருத்துவமனையில் இன்று உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு உறுதி மொழியை ஏற்று, குடும்ப நலத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த பிரத்யேக விழிப்புணர்வு அரங்கினை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா திறந்து வைத்தார்.



அதனைத்தொடர்ந்து, பிரசவ அறை, புற நோயாளிகள் பிரிவு, மற்றும் சிறப்பு பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு பிரிவு ஆகியவற்றை ஆய்வு செய்தார்.



மேலும், அரசு தலைமை மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்ட அறையினையும், தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, டயாலிஸஸ் பிரிவினையும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு செய்து நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.



இந்த ஆய்வின் போது இணை இயக்குநர் (சுகாதாரம்) ரகுபாபு, மருத்துவமனை கண்காணிப்பாளர் இரியன்ரவிகுமார், துணை இயக்குநர் (மருத்துவம்) நிர்மலா, பாலசுப்ரமணியம் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...