'நோ பார்க்கிங்'-ல் நின்ற போலீஸ் வண்டிக்கு பூட்டு


கோவையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பல்வேறு இடங்களில் வாகனங்களை நிறுத்தி செல்வதால் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், அத்தகைய இடங்களை கண்டறிந்து போக்குவரத்து போலீசார் சார்பில் 'நோ பார்க்கிங்' பலகை வைக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பை மீறி அந்த இடங்களில் வாகனங்களை நிறுத்திச் செல்வோரிடம் போலீசார் அபராதம் விதித்து வருவது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.



இந்தநிலையில், 'நோ பார்க்கிங்' அறிவிப்பு பலகை வைக்கப்பட்ட இடத்தில் நின்ற போலீசாரின் வாகனத்திற்கு போக்குவரத்து காவல்துறையினர் பூட்டு போட்ட சம்பவம் கோவையில் நடந்துள்ளது.



கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்புறம் கோவை மாநகர போக்குவரத்து போலீசார் 'நோ பார்க்கிங்' பலகை வைத்துள்ளனர். ஆனால், இன்று அப்பகுதிக்கு வந்த காவல்துறை வாகனம் ஒன்று அறிவிப்பு பலகைக்கு முன்புறமே வாகனங்களை நிறுத்திச் சென்றனர். அப்போது அங்கு வந்த போக்குவரத்து போலீசார் 'நோ பார்க்கிங்'-கில் நின்ற கார்களின் சக்கரங்களுக்கு பூட்டு போட்டனர். தொடர்ந்து, அருகில் நின்ற போலீசாரின் வாகனத்தின் சக்கரங்களுக்கும் பூட்டு போட்டுச்சென்றனர். ஆனால், பூட்டிய சில நிமிடங்களிலேயே அந்த பூட்டு அகற்றப்பட்டது.



'நோ பார்க்கிங்'-யில் நின்ற வாகனம் புலனாய்வு பிரிவு போலீசாருக்கு சொந்தமான வாகனம் என்று கூறப்படுகிறது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...