சிஆர்பிஎப் துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் அத்துமீறி நுழைந்ததாக 3 பேர் மீது வழக்கு

கோவை மாவட்டம், துடியலூர் பகுதியில் மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையின் துப்பாக்கிச் சுடும் பயிற்சி தளம் உள்ளது. இங்கு நேற்று கேரளாவில் இருந்து வந்த மூன்று பேர் வழிதவறி உள்ளே நுழைந்துள்ளனர். அப்போது அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த சிஆர்பிஎப் படை வீரர்கள் இவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது இவர்கள், மலப்புரத்தினைச் சேர்ந்த பனிஸ் (21), அர்ஷத் (20) மற்றும் எர்ணாகுளத்தினை சேர்ந்த தாமஸ் (20) என்பது தெரியவந்துள்ளது. வழிதவறி இங்கே வந்துவிட்டோம் என விளக்கம் அளித்த நிலையிலும் இவர்கள் மூவரும் மாவோயிஸ்ட் அமைப்பினைச் சேர்ந்தவர்களா என்ற கோணத்தில் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து, அவர்களை துடியலூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்த நிலையில், மூவரிடமும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அவர்கள் சிஆர்பிஎப் துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் வழி தவறி நுழைந்தது உறுதிசெய்யப்பட்டது.

இருப்பினும், பாதுகாப்புப் படைத் தளத்தில் நுழைந்தமைக்காக அத்துமீறி நுழைந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...