கோவையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கு பதில் 20 ரூபாய் நோட்டு வழங்கிய ஏடிஎம்


கோவையில் தனியார் வங்கி ஏடிஎம்-ல் 2000ரூபாய் நோட்டுக்கு பதிலாக 20 ரூபாய் நோட்டு வந்த சம்பவம் வாடிக்கையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கோவை செளரிபாளையம் பகுதியை சேர்ந்தவர் காளிதாஸ். அதே பகுதியில் உணவகம் நடத்தி வருகிறார். இந்த நிலையில், இன்று மாலை காளிதாஸ் தனது மருத்துவ செலவுக்காக சவுரிபாளையம் பகுதியில் இருக்கும் ஆக்ஸிஸ் வங்கி ஏடிஎம்-ல் பணம் எடுக்கச்சென்றார்.

50 ஆயிரம் ரூபாயை 5 தவணைகளாக எடுக்க முயற்சித்த அவர் 10ஆயிரம் ரூபாயாக எடுத்தார். ஒவ்வொரு முறையும் நான்கு 2000ம் ரூபாய் நோட்டுகளும் ஒரு 20 ரூபாய் நோட்டும் வந்தது.



இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இது தொடர்பாக வங்கி அதிகாரிகளிடம் புகார் அளித்தார். நீண்ட நேரமாகியும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வராததால் மனமுடைந்த அவர் மருத்துவ செலவுக்கு அவசரமாக தேவைப்படும் பணம் கிடைக்க தாமதமானதற்கு வங்கி அதிகாரிகள் உரிய பதிலளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

வங்கி ஏடிஎம்-ல் 2000-ம் ரூபாய் நோட்டுக்கு பதிலாக 20 ரூபாய் நோட்டு வந்தது வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...