கோவையில் வனத்துறையினரின் அதிரடி சோதனையில் விலங்குகளின் ரோமங்களிலால் தயாரிக்கப்பட்ட பெயிண்டிங் பிரஷ்கள் பறிமுதல்



வன விலங்குகளின் ரோமங்களில் இருந்தோ அல்லது அவற்றின் உறுப்புகளை கொண்டோ எந்த பொருட்களையும் தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ கூடாது என்ற சட்டம் உள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்  கீரி மற்றும் நரி போன்ற வன விலங்குகளின் ரோமங்களில் இருந்து தயாரிக்கப்பட்ட பெயிண்டிங் பிரஷ்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. 

இதை தொடர்ந்து, இன்று வன உயிரின குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கோவை மாநகரில் உள்ள பல்வேறு கடைகளில் சோதனை நடத்தினர்.



வன உயிரின குற்ற புலனாய்வு பிரிவு அதிகாரி மதிவாணன் தலைமையில் 12 அதிகாரிகள் 3 குழுக்களாக பிரிந்து கோவையில் இன்று அதிரடி சோதனை நடத்தினர். 

அப்போது காந்திபுரம், டவுன்ஹால், சவுரிபாளையம் போன்ற பல்வேறு இடங்களில் வன உயிரினங்களின் ரோமங்களில் இருந்து தயாரிக்கப்பட்ட சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெயிண்டிங் பிரஷ்கள் பறிமுதல் செய்யப்பட்டன.



தொடர்ந்து, சோதனை நடைபெறும் என்றும் இது தொடர்பாக நாளை பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெறும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...