ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி துப்புரவு பணியாளர்கள் தர்ணா

குறித்த தேதியில் ஊதியம் வழங்க வேண்டும் மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்கள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் இன்று கோவை மாநகராட்சி அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாநகராட்சியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட துப்புரவுப் பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு மாதந்தோறும் ஏழாம் தேதி ஊதியமானது வழங்கப்பட வேண்டும். ஆனால், இந்த மாதம் 13-ஆம் தேதியான போதும் ஊதியம் வழங்கவில்லை என குற்றம்சாட்டி 300-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் கோவை மாநகராட்சி அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் கடந்த சில மாதங்களாக ஒப்பந்த பணியாளர்களுக்கு குறித்த நேரத்தில் ஊதியம் வழங்காமல் இழுத்தடிப்பதாகவும், ஒவ்வொரு முறையும் போராடியே ஊதியம் பெற வேண்டி இருப்பதாக தெரிவித்தனர். குறித்த நேரத்தில் ஊதிகம் கிடைக்காததால் பல்வேறு பிரச்சனைகளை மாத மாதம் சந்திப்பதாக தெரிவித்தவர்கள், மாதம் தோறும் 5-ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.

மேலும் எந்த ஒரு பணி பலனும் இல்லாமல் குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்த துப்புரவு பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் மற்றும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர். தங்களது கோரிக்கை தொடர்பாக பல முறை மாநகராட்சி ஆணையரிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த முறை தங்கள் கோரிக்கை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட மாநகர சுகாதார துறை அதிகாரி, இம்மாதத்திற்கான ஊதியம் இன்று மாலைக்குள் வழங்கப்படும் எனவும், இனி வரும் காலங்களில் குறித்த தேதியில் ஊதியம் வழங்கப்படும் என உறுதி அளித்தார். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒரு தரப்பினர் கலைந்து சென்றனர். ஆனால் மற்றொரு தரப்பினர் ஊதியம் வரும் வரை போராட்டம் தொடரும் எனக் கூறி தங்களது தர்ணா போராட்டத்தினை தொடர்ந்து வருகின்றனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...