விறகு அடுப்பில் சமைத்த பெண் தீயில் கருகி பலி


கோவை வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன், கூலித்தொழிலாளி. இவரது மனைவி தெய்வானை. இந்த தம்பதியினருக்கு பெண்குழந்தை உள்ளது. 

ஏழ்மை காரணமாக முருகன் வீட்டில் கியாஸ் அடுப்பு இல்லை. தெய்வானை விறகு அடுப்பிலேயே சமையல் செய்து வந்தார். இந்த நிலையில், நேற்று மாலை விறகு அடுப்பில் சமைத்துக்கொண்டிருந்த தெய்வானையின் சேலையில் தீப்பிடித்தது. சுதாரித்துக்கொள்ளும் முன்பாக தெய்வானையின் உடல் முழுவதும் தீ பரவியது. இதனால் தெய்வானை கூச்சலிடவே, அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

உடலில் சுமார் 60 சதவிகிதத்திற்கும் மேல் தீக்காயம் ஏற்பட்டிருந்த தெய்வானைக்கு மருத்துவமனையில் திவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி தெய்வானை இன்று காலை பறிதாபமாக பலியானார். 

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போத்தனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...