பதின் பருவத்தினருக்கான இசைக்கருவிகள் இசைக்கும் "இசைஞர்- 2017" போட்டிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு


தி இந்து தமிழ் நாளிதழ், கோவை நன்னெறிக் கழகம் மற்றும் சரோஜினி நடராஜ் அறக்கட்டளை இணைந்து வழங்கும் பதின் பருவத்தினருக்கான இசைக்கருவிகள் இசைக்கும் போட்டி!

இசைக்கருவிகளை இசைக்கும் இளம் தலைமுறையினர் தங்களது திறன்களை வெளிப்படுத்த ஒரு தளம் ஏற்படுத்தித் தர வேண்டும் என்கிற எண்ணத்தில் கோவை நன்னெறிக்கழகம், சரோஜினி நடராஜ் அறக்கட்டளை மற்றும் தி இந்து தமிழ் நாளிதழ் இணைந்து ‘இசைஞர்- 2017’ எனும் இசைக்கருவிகள் இசைக்கும் போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

இதற்கு 13 முதல் 19 வயதிற்குட்பட்ட கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம்.

தகுதிச்சுற்று போட்டிகள் ஜூலை 29-ம் தேதியும் இறுதிப் போட்டி ஜூலை 30-ம் தேதி அன்றும் கோவை சரோஜினி நடராஜ் ஆடிட்டோரியத்தில் நடைபெறும்.

போட்டியில் கலந்துகொள்பவர்கள் அவரவர் இசைக்கருவிகளை கையோடு எடுத்து வரவேண்டும். உணவு மற்றும் பயணப்படி வழங்கப்பட மாட்டாது. பெயர், வயது, முகவரி, தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் ஆகியவற்றுடன் இசைக்க விரும்பும் கருவியின் பெயரையும் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க: http://bit.ly/hindu-instrumental-contest தி இந்து அலுவலகத்தில் (19&20 ஏ.டி.டி காலனி, எல்.ஐ.சி ரோடு, கோவை-18) நேரடியாகவும் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 15-07-2017.

வயது சான்று (பள்ளி / கல்லூரி அடையாள அட்டை) போட்டி நடைபெறும் அன்று கொண்டு வரவேண்டும்.

இளம் திறமைகளைக் கண்டறிந்து அங்கீகாரம் அளிக்க வேண்டும் எனும் உயரிய நோக்கில் இலாப நோக்கங்கள் இன்றி நடத்தப்படும் நிகழ்ச்சி இது. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

மேலும் விபரங்களுக்கு: 9843131323 / 0422 - 2212572.

இதில், காட்ஸ் வில்லா, உடுமலை.காம் மற்றும் ரேடியோ பார்ட்னராக ரேடியோ சிட்டி மற்றும் டிஜிட்டல் பார்ட்னராக சிம்ப்ளிசிட்டி செயல்படுவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...