வேளாண் பயிர்களுக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு

கோவை மாவட்டத்தில் வேளாண் பயிர்களுக்கு சொட்டுநீர் பாசனம் அமைக்க நடப்பாண்டிற்கு (2017- 2018) 1215 எக்டர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள கோவை மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த ஆண்டில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட குறைந்தளவே மழைப்பொழிவை தந்ததால் வறட்சி ஏற்பட்டு விவசாயிகளுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியது. அணைகள், குளம், குட்டைகள் என அனைத்து நீர்நிலைகளும் தண்ணீரின்றி வறண்டன.

நீர் நிலைகளிலும் நீர் இருப்பு இல்லாததால் அனைத்து பகுதிகளிலும் நிலத்தடி நீர் மட்டம் குறைந்தது. இவ்வாறு வரலாறு காணாத வகையில் ஏற்பட்ட வறட்சியினால் விவசாயிகள் பாதிக்காமல் இருந்திடும் வண்ணம் பயிர் மேலாண்மைக்கு சொட்டுநீர் பாசனத்தின் அவசியமும், பயன்கள் பற்றியும் விவசாயிகளுக்கு தெரியதொடங்கியுள்ளது. இந்நிலையில் வேளாண், தோட்டக் கலைத்துறை சார்பில் சொட்டுநீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் சொட்டுநீர் பாசனம் அமைப்பதற்கு கரும்பு 190 எக்டர், பருத்தி 25 எக்டர், தென்னை 500 எக்டர், மக்காச்சோளம் மற்றும் இதர பயிர்களுக்கு 100 எக்டர் மற்றும் தெளிப்பு நீர் பாசனத்துக்கு 400 எக்டரும் சேர்த்து மொத்தம் 1215 எக்டர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சிறுகுறு விவசாயிகளுக்கு 60 சதவிகிதம் மற்றும் பெரிய விவசாயிகளுக்கு 40 சதவிகிதமும் சொட்டுநீர் பாசன கருவிகள் வழங்குவதில் முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது.

சிறுகுறு விவசாயிகளுக்கு 100 சதவிகிதம் மானியத்திலும், பெரு விவசாயிகளுக்கு 70 சதவிகிதம் மானியத்திலும் சொட்டுநீர் பாசனம் அமைக்க நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

சொட்டுநிர் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள் சிட்டா, அடங்கல், நில உரிமைச்சான்று, ரேஷன்காட்டு, ஆதார் எண், நீர் ஆய்வு அறிக்கை மற்றும் சிறுகுறு விவசாயி சான்றுடன் வேளாண் அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் அந்தந்த பகுதி உதவி வேளாண் அலுவலர்களை தொடர்புகொண்டு மேலும் விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என்று வேளாண்மைத் துறை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதுகுறித்து மேலும் தகவலுக்கு வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம், லாலிரோடு, கோவை- 13. தொலைபேசி எண் 0422- 2432739 தொடர்புகொள்ளலாம்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...