கோவையில் போலி மருத்துவர்கள் இருவர் கைது


கோவையில் கடந்த 20 ஆண்டுகளாக உரிய சான்றிதழ் இல்லாமல் மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர்கள் இருவரை காவல்துறையினர் இன்று கைது செய்தனர்.

கோவை மாவட்டம், ஆலாந்துரை பகுதியில் மருத்துவத்தில் நுட்பம் பயின்ற சான்றிதழைக் கொண்டு கடந்த 20 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு சிகிச்சையளித்து வந்த ஆறுமுகராஜ் என்பவரை ஆலாந்துறை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 



பொதுமக்களிடமிருந்து வந்த புகாரை அடுத்து மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் கண்ணன் தலைமையிலான அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், ஆறுமுகராஜிடம் உரிய சான்றிதழ்கள் இல்லாதது தெரியவந்தது. இதனை அடுத்து கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இவர் மீது Ipc 419, 468,471 மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம் பிரிவு 15, இந்திய மருந்துகள் மத்திய கவுன்சில் சட்ட பிரிவு 17 ஆகிய ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, ஆறுமுகராஜை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதன் அடிப்படையில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.



இதேப்போல், தொண்டாமுத்தூர் அடுத்த உலியம்பாளையம் பகுதியில் கலைவாணி கிளீனிக் என்ற பெயரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மருத்துவம் பார்த்து வந்த கலைவாணி என்ற பெண்ணின் மீது சந்தேகத்தின் அடிப்படையில் அவருடைய கிளீனிக்கில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, தன்னிடம் உரிய ஆவணம் உள்ளதாக கலைவாணி தெரிவித்ததை அடுத்து அவரை காவல் நிலையத்தில் ஆவணங்களுடன் ஆஜராக காவல்துறையினர் அறிவுறுத்தினர்.



ஆனால், அவர் சான்றிதழ்களை ஒப்படைக்காததால் தொண்டாமுத்தூர் காவல்நிலைய போலீசார் வசம் பதிவு செய்து மோசடி பெண்ணான கலைவாணியை கைது செய்துள்ளனர். தொடர்ந்து இன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...