கரடு முரடான கருமத்தம்பட்டி சாலை- பொதுமக்கள் அவதி

கோவை மாவட்டத்தின் முக்கிய கிராமப்புற பகுதியான கருமத்தம்பட்டி சாலையில் சில தனியார் நிறுவனங்களின் கனரக வாகனங்களினால் சாலை பழுதடைந்து தற்போது மக்கள் பயன்படுத்த முடியாத நிலை நிலவிவருகிறது.



கருமத்தம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட சாலையில் தனியார் நிறுவனங்களின் கனரக வாகனங்கள் அதிகப்படியாக இயக்கப்படுவதால் அப்பகுதியில் சாலைகள் முற்றிலும் சேதமடைந்து காணப்படுகின்றன. குண்டும் குழியுமாக உள்ள அந்த சாலைகளில் தற்போது பெய்து வரும் மழை நீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது.

இதனால், அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அந்த சாலையினை கடந்து செல்ல மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மேலும், சில சமயங்களில் அந்த சாலையில் புழுதிகள் ஏற்பட்டு அருகில் உள்ள கடைகள், குடியிருப்புகளில் தேங்குவதும் நிலவிவருகிறது.

இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்த நிலையில் அரசு அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ளாத காரணத்தினால் அப்பகுதி மக்களே அந்த சாலையில் தேங்கியுள்ள கழிவுகளையும், தனியார் நிறுவனங்களின் கழிவுகளையும் அகற்றி வருகின்றனர். 

இதன் நடவடிக்கை குறித்து தகவல் பெற நகரசபை அதிகாரிகளுக்கு தொடர்புகொண்ட நிலையில், அதிகாரிகள் அழைப்பை துண்டிக்கவே செய்தனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...