தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் இடைக்கால ஓய்வூதிய குறைதீர்ப்பு மன்றம்

தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் ஓய்வூதியம் பெறும் ரயில்வே ஊழியர்களுக்கான 2017ம் ஆண்டுக்கான இடைக்கால ஓய்வூதிய குறைதீர்ப்பு மன்றம் இன்று (14.07.2017) நடைபெற்றது. இந்த மன்றத்திற்கு சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா தலைமை வகித்தார். 90 ரயில்வே ஓய்வூதியர்கள் மற்றும் பயனாளிகள் இந்த ஓய்வூதிய குறைதீர்ப்பு மன்றத்தில் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்தனர்.

இதில், 20 புதிய மனுக்கள் உள்பட மொத்தம் 98 மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன. அவற்றுள், 51 மனுக்களின் மீது முடிவுகள் எடுக்கப்பட்டு மொத்தம் ரூ. 1,15,44,748 வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. மீதமுள்ள மனுக்களில், 27 மனுக்கள் போதிய ஆவணங்கள் இல்லாததால் தீர்க்கப்படவில்லை. புதியதாக தரப்பட்ட 20 மனுக்கள் மீது ஆய்வு செய்து விரைவில் ஆணை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த ஓய்வூதிய குறைதீர்ப்பு மன்றத்தில் சேலம் கோட்ட கூடுதல் ரயில்வே மேலாளர் சந்திரபால், சேலம் கோட்ட பணியாளர் அலுவலர் எஸ். திருமுருகன் மற்றும் இதர சேலம் கோட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...