சதமடித்த தக்காளி விலை- இனி தக்காளி சாதம் "கட்"

தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

மக்களின் அன்றாட உணவில் அத்யாவசியமான ஒன்று தக்காளி ஆகும். ஒவ்வொரு உணவிலும் தக்காளி இன்றியமையாததாக உள்ளது. இதில், கோவை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மட்டும் ஒரு நாளுக்கு தக்காளி தேவை 80 முதல் நூறு லாரிகள் வரை தக்காளி தேவைப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்புவரை சரிவர லாரிகளில் வந்த தக்காளி தற்போது வெறும் 30 முதல் 40 லாரிகளில் மட்டுமே வருகிறது. இதனால் தக்காளி விலை கணிசமாக உயர்ந்துவிட்டது.

அதுமட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வரும் தக்காளி, பீகார், ஒடிசாவில் ஏற்பட்டுள்ள வறட்சி மற்றும் விளைச்சல் குறைவானதால் அந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் ஆந்திரா, கர்நாடகாவை நம்பி இருந்த கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களிலும் தக்காளிக்கு திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தக்காளி சந்தைக்கு புகழ்பெற்ற ஒட்டன்சத்திரம் சந்தையுலும் தக்காளி வரத்து கடுமையாக குறைந்துவிட்டது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

கோவையில், தற்போது தரமான தக்காளி ஒரு கிலோ 100 ரூபாயிக்கு விற்கப்படுவது சிறு, குறு நடுத்தர வர்க்கத்தினரை மேலும் இன்னல்களுக்கு உள்ளாக்கியுள்ளது. 

ஜிஎஸ்டி உயர்வு, பெட்ரோல் விலையில் அன்றாட மாற்றம், வறட்சி என்று அன்றாடம் பல பிரச்சனைகளில் சிக்கித் தவித்து வந்த மக்களுக்கு தற்போது காய், கறிகளின் விலை உயர்வும் பேரடியாக அமைந்துள்ளது.

இனிமேல் வெங்காயம் வெட்டினால் மட்டுமல்ல, தக்காளிக்கும் கண்ணீர் வடியும்...

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...