டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் கல்லூரி மாணவர்களைக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்த மாநகராட்சி ஆணையர் அறிவுரை

கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் இன்று மாநகராட்சியில் பணிபுரியும் கொசு ஒழிப்பு பணியாளர்கள், கொங்கு நர்சிங் கல்லூரி அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் 100 நபர்களுடன் மத்திய மண்டலம் சங்கனூர் மற்றும் இரத்தினபுரி பகுதியில் கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, வீடு வீடாக சென்று துப்புரவு பற்றிய விழிப்புணர்வு பிரசுரங்கள் விநியோகித்தல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற சிறப்பு டெங்கு தடுப்பு நடவடிக்கை பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது.



இதனைத் தொடர்ந்து தெற்கு மண்டலம் குனியமுத்தூர் பகுதியில் மாநகராட்சி பணியாளர்கள், கல்லூரி மாணவர்களைக் கொண்டு நடைபெற்ற சிறப்பு டெங்கு தடுப்பு பணிகளை மாநகராட்சி ஆணையர் மற்றும் துணை ஆணையர் ஆய்வு மேற்கொண்டனர். 

இச்சிறப்பு டெங்கு தடுப்பு பணிகள் மாநகராட்சியின் ஐந்து மண்டல பகுதிகளில் நடைபெற்றது. அவைகளில் மத்திய மண்டலத்தில் சங்கனூர் மற்றும் இரத்தினபுரி இடங்களில் கொங்கு நர்சிங் கல்லூரி மாணவர்கள் 100 பேரும், டிபிசி பணியாளர்களும் 100 பேரும் இணைந்து பார்வையிடப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 4890. தெற்கு மண்டலத்தில் குனியமுத்தூர் இடத்தில் நேரு கல்லூரி மாணவர்கள் 100 பேரும் டிபிசி பணியாளர்களும் 60 பேரும் இணைந்து பார்வையிடப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 1643.

கிழக்கு மண்டலத்தில் நேரு நகர் மற்றும் காளப்பட்டி இடங்களில் பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் 100 பேரும் டிபிசி பணியாளர்களும் 65 பேரும் இணைந்து பார்வையிடப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 3015. மேற்கு மண்டலத்தில் கல்வீராம் பாளையம், பொம்மனாம் பாளையம், ஓணாம்பாளையம் இடங்களில் இராமலிங்க சௌடேஸ்வரி கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் 120 பேரும் டிபிசி பணியாளர்களும் 50 பேரும் இணைந்து பார்வையிடப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 1320. 

வடக்கு மண்டலத்தில் காந்திமா நகர் இடத்தில் சி.எம்.எஸ். கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் 100 பேரும் டிபிசி பணியாளர்களும் 100 பேரும் இணைந்து பார்வையிடப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 2525. இனி வரும் காலங்களில் மாநகராட்சி ஐந்து மண்டல பகுதிகளில் உள்ள இடங்களில் இப்பணிகள் தொடர்ச்சியாக நடைபெறும் என மாநகராட்சி ஆணையர் அறிவித்தார்.

மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியில் துணை ஆணையர் ப.காந்திமதி, மாநகர நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், தெற்கு மற்றும் மேற்கு மண்டல உதவி ஆணையாளர் (பொ) டி.ஆர்.ரவி, வடக்கு மண்டல உதவி ஆணையாளர் (பொ) சரவணன், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...