கோவை - பொள்ளாச்சி பயணிகள் ரயில் சேவை இன்று முதல் துவக்கம்

மக்கள் நீண்ட நாட்கள் எதிர்பார்த்திருந்த கோவை- பொள்ளாச்சி பயணிகள் ரயில் சேவை இன்று (ஜூலை 15) துவக்கப்பட உள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு கோவை - பொள்ளாச்சி இடையே மீட்டர் கேஜ் ரயில் பாதை அகல ரயில் பாதையாக மாற்றும் பணி துவங்கப்பட்டது. சுமார் 8 ஆண்டுகாலம் நடைபெற்று வந்த இந்த பணிகள் கடந்த மார்ச் மாதம் முடிவடைந்தது. ஆனால், ரயில் போக்குவரத்து சேவை துவங்குவதற்கான தேதி குறிப்பிடப்படாமல் காலம் கடந்துவந்தது.

இந்நிலையில் இன்று கோவையில் இருந்து மதியம் 1.35 மணிக்கு பொள்ளாச்சிக்கு ரயில் (ரயில் எண்- 06081) புறப்படுகிறது. இந்த ரயில் பொள்ளாச்சிக்கு 2.40-க்கு சென்றடையும். தொடர்ந்து மாலை 3.15 மணியளவில் (ரயில் எண்- 06082) புறப்பட்டு கோவைக்கு 4.30 மணிக்கு வந்தடையும். 

இதன் துவக்க விழாவில் சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் மற்றும் கட்டுமான தலைமை பொறியாளர், உதவி தலைமை பொறியாளர் உட்பட பலர்கலந்து கொள்கின்றனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...