பூரண மதுவிலக்கு கோரி காங்கிரஸ் சார்பில் கோவையில் உண்ணாவிரதம்

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டருக்குள் செயல்பட்டு வந்த மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட அரசு மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளன.



இதனைத்தொடர்ந்து, மூடப்பட்ட இந்த டாஸ்மாக் கடைகளை குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில் திறக்க மதுபானக் கடை நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கைகளை மேற்கொண்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் பொதுமக்கள் ஆங்காங்கே பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டனர். இதில் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி மற்றும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், நீதிமன்ற தீர்ப்பை மதித்து மதுபானக் கடைகளை மூடவேண்டும் எனவும் தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இதனிடையே, பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி கோவை சிவானந்த காலணியில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து குமரி அனந்தன் கூறுகையில், மதுவால் பல குடும்பங்கள் சீரழந்துள்ளது. பூரண மதுவிலக்கை தமிழகத்தில் கொண்டு வர வேண்டும். இதற்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக உள்ளோம்" என தெரிவித்தார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...