மக்களுக்கு விழிப்புணர்ச்சி வந்துவிட்டது ஆனால் பொறுப்புணர்ச்சி வரவில்லை: உழவே தலை கருத்தரங்கில் கிருஷ்ணராஜ் வானவராயர் பேச்சு

கோவை கொடிசியா வளாகத்தில் 'அக்ரி இன்டெக் 2017' என்ற வேளாண் கண்காட்சி நடைபெற்று வருகிறது. கண்காட்சியின் பகுதியாக 'உழவே தலை' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்திய தொழில் வர்த்தக சபை மற்றும் கொடிசியா ஒருங்கிணைத்த இந்த கருத்தரங்கில் பாரதிய வித்யா பள்ளியின் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். மேலும், இயற்கை விவசாய அறிஞர்கள் 16 பேர் கலந்து கொண்டு கருத்தரங்கை நடத்தினர். 



முன்னதாக கிருஷ்ணராஜ் வானவராயர் பேசியதாவது:- 

சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த காலகட்டத்தில் நாம் நிறைய சாதித்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யவில்லை. அனைத்து வளங்களும் நம்மிடம் இருந்தும் இந்த தொய்வுக்கு காரணம் மக்களின் பங்களிப்பு இல்லாமல் போனதே காரணம். இவ்வளவு பெரிய தேசத்தை ஒரு அரசியல் கட்சியோ அல்லது முதல் அமைச்சரோ மட்டும் கவனித்துக் கொள்ள முடியாது. 

மக்கள் ஆக்கப்பூர்வமாக செயல் பட்டு மாற்றத்தை கொண்டுவர வேண்டும். சமீப காலமாக விவசாயிகளின் தற்கொலை சதவிகிதம் அதிகரித்து வருகிறது. விவசாயிகளின் மீதான மக்களின் அலட்சியம் மற்றும் அறியாமை நீங்கும் போது தான் பின்னடைவு நீங்கும். உழவே தலை என்ற இந்த கருத்தரங்கிற்கு அதிகமான இளைஞர்கள் வந்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. பிரச்சனைகள் மீது மக்களுக்கு விழிப்புணர்ச்சி வந்துவிட்டது. ஆனால் பொறுப்புணர்ச்சி வரவில்லை. இயற்கையை கெடுப்பது, விவசாயத்தை புறக்கணிப்பது விவசாயத்தின் மீது எதிர்மறை எண்ணங்கள் தோன்றுவது போன்றவைகள் தவிர்க்கப்பட்டு, இளைஞர்களை விவசாயத்திற்குள் புகுத்திட வேண்டும்." இவ்வாறு அவர் பேசினார். 



இக்கருத்தரங்கில் இந்திய தொழில் வர்த்தக சபையின் தலைவர் வனிதா மோகன், சித்த மருத்துவர் சிவராம் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...