தமிழ்நாட்டில் விளைநிலங்களை விட்டு வேளாண்குடிமக்கள் வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக சீமான் பேச்சு

இந்தியா அதிக அளவில் வளங்கள் உள்ள நாடு. இந்நிலையில், ஹட்ரோகார்பன் திட்டம், மீத்தேன் திட்டம் போன்றவற்றின் மூலம் விவசாய நிலங்களை பறித்து மக்களை வெளியேற்றி வளங்களை மத்திய அரசு சுரண்டி வருகிறது. இதை கேட்பதற்கு திராணியற்ற அரசாக மாநில அரசு உள்ளது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.



காமராசரின் பிறந்தநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வடகோவை மேம்பால பூங்காவில் உள்ள பெருந்தமிழர் காமராசர் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தினார்.



இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேட்டியளிக்கையில் அவர் கூறியதாவது:-

அரசியல் வரலாற்றில் தூய தலைவராக இருந்தவர் காமராசர் அவர்கள். அவருடைய ஆட்சிக் காலத்தில் பல்லாயிரக்கணக்கான பள்ளிக்கூடம் திறந்தவர். ஆனால், இன்று தெருவிற்கு தெருவில் மதுக்கடை அதிக அளவில் திறக்கப்படுகிறது. அவர் இல்லையென்றால் இன்று கல்வியறிவு பெற்ற சமுதாயமாக இருந்திருக்க முடியாது. உண்மை, நேர்மை, எளிமை போன்றவற்றை அவரது பெரும் சொத்தாக வைத்து வாழ்ந்து வந்தார். இன்றைய பிள்ளைகளுக்கும் ஒரு மிகச்சிறந்த வழித்தடம் காட்டித்தந்தவர். 

அவரது ஆட்சியை போலவே நடத்தவேண்டும் என்று சொல்பவர்கள் இன்று ஊழல் செய்து வருகின்றனர். அவர்கள் இதுபோன்று பேசுவதே அர்த்தமற்றது ஆகும். காமராசர் எந்த வழியில் பயணித்தாரோ அந்த வழியில் நாங்கள் பயணிக்க இந்நாளில் உறுதிமொழி ஏற்கின்றோம்' என்றார்.



மேலும், தமிழ்நாடு மீனவர்கள் பிரச்சனை குறித்து சீமான் பேசுகையில், தமிழ்நாடு மீனவர்கள் மீன்பிடி தொழிலை விட்டு வெளியேறி வருகின்றனர். இந்தியா நட்பு நாடு என்று கூறுகிறார்கள் ஆனால், தமிழ்நாட்டு மீனவர்களை இரண்டு மாதங்கள், மூன்று மாதங்கள் என இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து தண்டிக்கின்றனர்.

மக்களின் வாழ்வாதாரத்தைப் பற்றி மத்திய அரசு கவலை கொள்வதில்லை. இதை மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் யாரும் கண்டு கொள்வதில்லை. விளைநிலங்களை விட்டு இன்று வேளாண்குடிமக்கள் வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

இந்தியா அதிக அளவில் வளங்கள் உள்ள நாடு. ஹட்ரோகார்பன் திட்டம், மீத்தேன் திட்டம் போன்றவற்றின் மூலம் விவசாய நிலங்களை பறித்து மக்களை வெளியேற்றி வளங்களை மத்திய அரசு சுரண்டி வருகிறது. இதை கேட்பதற்க்கு மாநில அரசிற்கு திராணியில்லை. எங்களிடம் அதிகாரம் இருந்திருந்தால் காவேரி வேளாண்மை வாரியம் உரிய நேரத்தில் அமைத்திருப்போம். 

மதுக்கடையை தடை செய்ய வழக்கு தொடர்ந்தால், அது அரசு கொள்கை முடிவில் தலையிட முடியாது என்கின்றனர். நீதியின் பக்கம் மக்களுக்கு அநீதி நடக்கிறது' என்றார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...