பிக்பாஸ் ஒரு அருவருக்கத்தக்க நிகழ்ச்சி- பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா

நடிகர் கமல்ஹாசனே வக்கிர நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டு இருக்கிறார். இவர் ஏன் மற்றவர்களை விமர்சிக்கின்றார் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு அருவருக்கத்தக்க நிகழ்ச்சி என எச்.ராஜா தெரிவித்தார்.

கோவையில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

பணம் பாதாளம் வரை பாயும் என்பார்கள், ஆனால் தற்போது பரப்பன அக்ரஹாரம் வரை பாய்ந்திருக்கின்றது. கர்நாடக சிறைத் துறை டிஜிபி மீதான குற்றச்சாட்டு அதிர்ச்சி அளிக்கின்றது. திமுக, அதிமுக போன்ற கட்சிகள் ஊழலின் மூலமாக பெற்ற பணத்தை சிறைச் சாலையிலும் சொகுசு வாழ்க்கை வாழவும் பயன்படுத்துகின்றனர். இந்த மாதிரியான சக்திகளை தமி்ழகத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்.

ஜிஎஸ்டி வரிவிதிப்பினை பயன்படுத்தி சில இடங்களில் அதிக கட்டணம் வசூல் செய்வது தெரியவந்துள்ளது. சில இடங்களில் தெரியாமல் நடக்கும் இது போன்ற தவறுகளை 3 மாதத்திற்குள் சரி செய்து கொள்ள வேண்டும். இல்லையெனில் மூன்று மாதங்களுக்கு பின்னர் மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்கும். சசிக்கலாவிற்கு என தனியாக சமையல் அறை அமைத்து இருப்பது பணத்திமிறை காட்டுகின்றது. இதற்கு மக்களவை சபாநாயகர் எதிர்க்கட்சிகளை குற்றம் சுமத்துவது தவறானது. 

சிஸ்டம் சரியில்லை என தமிழக அரசை நடிகர் கமலஹாசன் விமர்சனம் செய்து இருப்பது தொடர்பான கேள்விக்கு, நடிகர் கமல்ஹாசனே வக்கிர நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டு இருக்கிறார். இவர் ஏன் மற்றவர்களை விமர்சிக்கின்றார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு அருவருக்கத்தக்க நிகழ்ச்சி. 

நீட் தேர்வினால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என சொல்வது தவறானது. சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் படித்தவர்களும் தமிழர்கள்தான். ஊடகங்கள் மத்திய அரசுக்கும் மோடிக்கும் எதிராக செயல்படுவதை கைவிட வேண்டும். 50 ஆண்டு காலம் ஆண்ட திராவிட கட்சிகள் தமிழர்களை பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளிவிட்டனர்". 

இவ்வாறு எச்.ராஜா தெரிவித்தார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...