மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளை ஒட்டியப் பகுதிகளில் அதிகப்படியான மழை பெய்ய வாய்ப்பு

நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களின் மலை பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. சென்னையின் காலநிலை இனிமையாக இருக்கிறது. மேக மூட்டத்துடன் இருக்கிறது. எப்போதாவது சிறு தூறல்கள் வரலாம். வார கடைசியில் ஊர் சுற்றுவதற்கு ஏற்ற கால நிலை இது.

ஜூன் மாத கடைசி வாரத்தில் பெய்த மழைக்கு பிறகு நீலகிரி மற்றும் கோவை மலை பகுதிகள் மழை பெறாமல் அமைதியாக இருந்தன. இப்போது வெளியே தெரியாத அளவிற்கு மிதமான மழையை இந்த இரண்டு பகுதிகளும் பெற்று வருகின்றன. வரும் 19-ம் தேதியில் இருந்து மழையின் வேகம் அதிகரிக்க தொடங்கும். 2-3 நாளைக்கு பெய்யக் கூடும். தமிழ் நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளை ஒட்டிய பகுதிகளில் நல்ல மழையை எதிர் பார்க்கலாம். 

தமிழக மலை பகுதிகளில் பெய்த மழை விவரங்கள். mm கணக்கில் 14.07.2017 காலை 8.30 வரை பெய்த விவரங்கள்:

நீலகிரிக்கு உட்பட்ட பகுதியில் மழை விபரம்

  • எமரால்டு - 80
  • கிளென்மோர்கன் - 29
  • மேல் பவானி - 28
  • அவலான்ஜி - 25
  • கூடலூர் பஜார் - 21
  • நடுவட்டம் - 20
  • கேத்தி - 18
  • முக்குறுத்தி - 17
  • பார்ஷன்ஸ் வேளி - 16
  • பைகாரா - 13
  • கோத்தகிரி - 10
  • உதகை - 10
  • குந்தா பாலம் - 10
  • சந்திநல்லா - 10
  • போத்திமுன்டு - 10


கோவைக்கு உட்பட்ட பகுதியில் மழை விபரம்

  • பரம்பிக்குளம் அணை - 45
  • வால்பாறை தாலுகா அலுவலகம் - 40
  • சோலையார் அணை - 38
  • வால்பாறை பிடிஓ - 34
  • சின்ன கல்லார் - 30
  • சிறுவாணி அணை - 27
  • துனகடவு - 25
  • மானாம்பள்ளி - 23
  • பொள்ளாச்சி - 13
  • கோத்தகிரி - 11
  • அடிவாரம் - 10


சென்னையை பொறுத்த வரையில் சிறு தூறல்கள் ஏற்படலாம். மற்றும் உதகை மாதிரியான கால நிலை நிலவுகிறது. இடியுடன் கூடிய மழைக்கு நாம் காத்து இருக்க வேண்டும்.

சென்னையில் இப்போது இடியுடன் கூடிய மழையை எதிர் பார்க்க வேண்டாம். இருண்ட வானத்துடன் மேக மூட்டத்துடன் இருக்கும். ஆனால் சென்னையின் தெற்கு பகுதியில் இருந்து பாண்டி மற்றும் கடலூர் பகுதி வரை மழை வரலாம்.

தமிழ் நாட்டின் இதர பகுதிகள்

டெல்டா மாவட்டங்களை ஒரு பகுதியில் குறிப்பாக திருவாரூர் மாவட்டத்திலும் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளிலும் கிட்டத்தட்ட உறுதியான மழையை இன்று எதிர் பார்க்கலாம். வட மேற்கு உள் மாவட்டங்களில் மிதமான மழையை உறுதியாக எதிர் பார்க்கலாம். கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களின் சில பகுதிகளில் தூறல்கள் அல்லது மிதமான மழையை எதிர் பார்க்கலாம். கடலூரில் இருந்து டெல்டா மாவட்டங்கள் வரை உள்ள பகுதிகளும் மழை பெற வாய்ப்பு உண்டு.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...