சேரி பிகேவியர் என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்கு நடிகர் கமலஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும்- புதிய தமிழகம் கட்சி டாக்டர் கிருஷ்ணசாமி



சேரி பிகேவியர் என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்கு தனியார் தொலைக்காட்சி நிர்வாகமும், நடிகர் கமல்ஹாசனும் பொறுப்பேற்று மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் போராட்டம் நடத்தப்படும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், மொழி, இனம், சாதி, பொருளாதார ஏற்றத்தாழ்வு அடிப்படையில் தாழ்வுபடுத்தி பேசக்கூடாது என்ற பொதுவான நியதி இருந்தாலும், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒருவர் சேரி பிகேவியர் என்ற வார்த்தையை பயன்படுத்தியது தவறு. இந்தியாவில் சில மக்கள் சேரியில் வாழும் சூழலை ஏற்படுத்தியதற்கு மேல்தட்டு வர்க்கத்தினர் வெட்கப்பட வேண்டுமே ஒழிய, அவமானப்படுத்தக் கூடாது. இதற்கு தனியார் தொலைக்காட்சி நிர்வாகமும், நடிகர் கமல்ஹாசனும் பொறுப்பேற்று மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் போராட்டம் நடத்தப்படும்.

நடிகர் கமல்ஹாசன் அனைத்து துறைகளிலும் ஊழல் இருப்பது குறித்த பத்திரிகையாளர் கேள்விக்கு, நடிகர் கலம்ஹாசன் ஊழல் குறித்து ஆதாரத்துடன் பேச வேண்டும். ஊழல் புகார் தொடர்பாக ஆதாரம் கொடுக்க வேண்டியது அவரது பொறுப்பு. 

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்தின் வெற்றி என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்று. துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் கோபால கிருஷ்ணகாந்திக்கு அனைவரும் ஆதாரவு கொடுத்தால் தவறல்ல'  என டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...