கோவையிலிருந்து கொழும்பு வரை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான போக்குவரத்து சேவை துவக்கம்


ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், கோவையிலிருந்து கொழும்பு வரை வாரத்தில் நான்கு நாட்கள் என கோவையில் விமான போக்குவரத்து சேவை துவங்கியுள்ளது. இந்தியாவில் 14வது நகரமாகவும், தென்மாநிலங்களில் உள்ள மூன்று நகரங்களில் கோவையிலும் இச்சேவை துவங்கியுள்ளது. இந்த வாரத்தில் விசாகபட்டினத்திலிருந்து ஜூலை 8ம் தேதியிலும், ஹைதரபாத்திலிருந்து ஜூலை 12ல் இருந்தும் துவங்கியுள்ளன. இதனுடன் இந்தியாவில் 14 நகரங்களுக்கு 126 விமானங்களை இயக்குகிறது. இதில் சென்னை, திருச்சி, திருவனந்தபுரம், மும்பை, புதுதில்லி, கயா, மதுரை, வாரணாசி, கொச்சி, பெங்களூர் மற்றும் கொல்கத்தா போன்ற நகரங்களுக்கு முன்னதாகவே சேவையைக் கொண்டுள்ளது. 



இது குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமை வணிக அதிகாரி சிவா ராமச்சந்திரன் கூறுகையில், தமிழ்நாட்டின் அடுத்த துடிப்பான நகரமாக திகழும் கோவைக்கு எங்களது சேவையை துவக்குவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். உங்களது வீட்டு வாசலிலிருந்து உலகத்தில் பல நாடுகள், நகரங்களுடன் தொடராக செல்ல, எளிய முறை பயணமாக இது அமையும். இரண்டு நாடுகளுக்கு இடையே உள்ள உறவுகளை வலுப்படுதவும், வர்த்தகத்தையும், சுற்றுலா, ஆன்மீக பயணம், உடல் நலம் மற்றும் கல்வி போன்றவற்றை மேம்படுத்தவும் இது பயனுள்ளதாக அமையும். 

இந்த விமான சேவை துவக்கத்துக்குபின், வர்த்தக சமுதாயத்தினரும், இந்தியாவின் தொழில் நகரமாக திகழும் கோவையின் ஜவுளி, பொறியியல், வணிகம், கல்வி, தகவல் தொழில்நுட்பம், மருத்துவம், உற்பத்தி என பல்வேறு தொழில் வளர்ச்சிக்கு வாய்ப்பாக அமையும். இந்த விமான பயணம் செய்வோர் விருது பெற்ற இலங்கையின் விருந்தோம்பலை அனுபவிக்க முடியும். ஸ்ரீலங்கன் நிறுவனத்தின் புதிய ஏ321நியோ விமானங்கள் தென்னிந்தியாவுடன் இணைகிறது என்பது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.



விமானப் பயண நேரம்:

கொழும்பு - கோவை புறப்படும் நேரம்: 1:30 மதியம் சென்றடையும் நேரம்: 2:35.

கோவை - கொழும்பு புறப்படும் நேரம்: 3:35 மதியம் சென்றடையும் நேரம்: 4:45.

இயங்கும் நாட்கள்: செவ்வாய், வியாழன், வெள்ளி மற்றும் ஞாயிறு.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...