கோவையில் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம்

கோவையில் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டெகு காய்ச்சலுக்கான சிறந்த நோய் எதிர்ப்பு மருந்தாக நிலவேம்பு கஷாயம் உள்ளது. தற்போது நிலவேம்பு கஷாயம் பொதுமக்களுக்கு வழங்குவது கோவையில் ஒருசில பகுதிகளில் துவங்கியுள்ளது. 



உக்கடம் தெற்கு பகுதியில் உள்ள பிலால் நகர், பொன்விழா நகர், அண்ணா நகர், ரோஸ் கார்டன், சாராமேடு மற்றும் கரும்புக்கடை போன்ற பகுதிகளில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டு வருகிறது. இன்று தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற சங்கம் சார்பில் 86-வது வார்டின் முன்னாள் கவுன்சிலர் சாதிக் அலி தலைமையில் வழங்கப்பட்டது.



பருவமழைக் காலங்களில், சுற்றுப்புற சுகாதாரம் உள்ளிட்டவயின் அடிப்படையில் பரவும் இதுபோன்ற நோய்களை உடனடியாக கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். மாவட்ட நிர்வாகம், சுகாதாரம் உள்ளிட்ட அந்தந்தந்த உள்ளாட்சித்துறை பணியாளர்கள் உரிய நடவடிக்கை எடுத்து கோவை மாவட்டத்தில் பரவலாக பெருகி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவது மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...