அடியாட்களை வைத்து மிரட்டும் பைனான்சியல் நிறுவனத்தின் மீது நடவடிக்கை கோரி சிங்காநல்லூர் பகுதி மக்கள் ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டம், சிங்காநல்லூரில் செயல்பட்டு வரும் ஜனலட்சுமி பைனான்சியல் சர்வீசஷ் லிமிட் என்ற தனியார் நிறுவனம் பணத்தை கட்டச் சொல்லி வீட்டிற்கு வந்து அடியாட்களைக் கொண்டு மிரட்டுவதாக காங்கேயம்பாளையம் பகுதி மக்கள் சுமார் 18 பேர் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 



இதுகுறித்து அவர்கள் வழங்கியுள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது:-

சிங்காநல்லூர் அடுத்த காங்கேயம்பாளையம் பகுதியில் வசித்து வரும் நாங்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக ஜனலட்சுமி பைனான்சியல் சர்வீசஷ் லிமிட் என்ற தனியார் நிறுவனத்திடம் தொழில் துவங்க பணம் பெற்றோம். இந்நிலையில், இந்நிறுவனத்தின் உரிமையாளர் ரமேஷ் ராமநாதன் திடீரென இறந்துவிட்டார். இதனால், நீங்கள் வாங்கிய கடனை திரும்ப செலுத்த வேண்டாம் என வசூல் செய்யும் நபர்கள் வீட்டிற்கு வந்து கூறினர். மேலும், கடந்த 7 மாதமாக பணம் வசூலிக்க யாரும் வரவில்லை.

இந்நிலையில், அந்த தனியார் நிறுவனத்தில் பணிபுரிவோர் மீண்டும் பணம் வசூலிக்க வந்தனர். வேலையின்றி தவித்துவரும் நாங்கள் உடனடியாக பணம் செலுத்த முடியாத நிலை குறித்து விளக்கியும் அடியாட்களைக் கொண்டு வீட்டிற்கு வந்து மிரட்டிச் செல்கின்றனர். நாங்கள் வாங்கிய கடனை சிறிது சிறிதாக திருப்பிச் செலுத்த தயாராக உள்ளோம்.

எனவே, மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து நடவடிக்கை மேற்கொண்டு எங்களது வீட்டிற்கு அடியாட்களுடன் வந்து மிரட்டல் விடுத்த ஜனலட்சுமி பைனான்சியல் சர்வீசஷ் லிமிட் கிளை அலுவலர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் வழங்கியுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...