ராஜ விதியில் உள்ள விஜயா பதிப்பகத்தில் புத்தக திருவிழா இன்று துவக்கம்


கோவை ராஜவீதியில் உள்ள விஜயா பதிப்பகத்தில் புத்தக திருவிழா இன்று துவங்கியது. இதனை கோவை மாவட்ட கண்காணிப்பாளர் மூர்த்தி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேரூர் மருதாசல அடிகளார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



முதல் விற்பனையை துவக்கி வைத்து கோவை மாவட்ட கண்காணிப்பாளர் மூர்த்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், புத்தக வாசிப்பு என்பது அனைவரிடமும் உருவாக வேண்டும். இது மாதிரியான புத்தக திருவிழாக்களால் புத்தக வாசிப்பு மக்களிடையே அதிகரிக்க வாய்ப்புள்ளது. 

சமுக வலைதளங்களின் மூலம் வாசிக்கப்படுவது மனதில் தங்குவது இல்லை. புத்தகமாக படிக்கும்போது மன பயிற்சி மற்றும் அறிவு வளர்ச்சிக்கு உதவும் என்றார்.

இன்று துவங்கிய இந்த புத்தக திருவிழா வரும் ஜூலை 31ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் ஆன்மீகம், அறிவியல், குழந்தைகள் இலக்கியம் உள்ளிட்ட சில புத்தகங்களுக்கு 30 சதவிகிதம் வரை தள்ளுபடி உள்ளதாக விஜயா பதிப்பக உரிமையாளர் வேலாயுதம் தெரிவித்தார். பல்வேறு தரப்பட்ட நூல்கள் இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது. இந்த புத்தக கண்காட்சி கோவை மக்களின் புத்தக வாசிப்புக்கு கிடைத்த விழாவாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...