மாத ஊதியத்தை சரியான நேரத்தில் வழங்க வலியுறுத்தி மில் தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டம், கணுவாய் அருகே உள்ள சோமையாம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் டுகெதர் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் வடமாநில தொழிலாளர்கள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இத்தொழிலாளர்களுக்கு கடந்த ஓராண்டுக்கும் மேலாக மாதாமாதம் முறையாக சம்பளம் குறிப்பிட்ட தேதியில் வழங்காமல் மாத இறுதியில் வழங்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் பணப்பலன்களை தராமல் நிர்வாகம் இழுத்தடிப்பதோடு, சங்கத்தின் மூலமாக பேச்சுவார்த்தை நடத்தியே மாத ஊதியத்தை பெற வேண்டிய நிலை இருப்பதாகவும் தொழிலாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக தொழிலாளர் நலத்துறை அலுவலகம் உட்பட அரசு துறைகளில் மனு அளித்தும் உரிய நடவடிக்கை இல்லாததால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் சம்பளத்தை பெற்றுத்தரக்கோரி மனு அளித்தனர்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...