அரசை குறை கூறுவதாக கூறி கமலஹாசனின் உருவப்படம் எரிப்பு

தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் அதிகரித்துவிட்டது என்று நடிகர் கமலஹாசன் கூறியதையடுத்து தமிழக அமைச்சர்களும் பல்வேறு அமைப்பினரும் கமலஹாசனுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.



இந்த நிலையில், தமிழக அரசை ஆதாரமில்லாமல் குறை கூறும் கமலஹாசனை கைது செய்ய வேண்டும் என்றும், தமிழக கலாச்சாரத்தை பாதிக்கும் வகையில் வெளியாகி வரும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டியும் கோவையில் சக்தி சேனா அமைப்பினர் கமலஹாசனின் உருவப்படத்தை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 



கோவை சிங்காநல்லூர் உழவர் சந்தை முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் சக்தி சேனா அமைப்பைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கமலஹாசனுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். 

தொடர்ந்து, அந்த அமைப்பின் மாநில பொது செயலாளர் ஜெகதீசனார் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'இந்து மதத்தை பற்றியும் தமிழக அரசு குறித்தும் குறை கூறிவரும் நடிகர் கமலஹாசன் சுய ஒழுக்கம் இல்லாதவர். 'லிவிங் டூ கெதர்' என்கிற கலாச்சாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வாழ்க்கை முறையில் வாழும் கமலஹாசன் அரசாங்கத்தை குறை கூறுவதை ஏற்க முடியாது. 

ஆதாரமில்லாமல் குறை பேசிவரும் கமலஹாசனை உடனடியாக கைது செய்ய வேண்டும். மேலும், தமிழக பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் பாதிக்கும் வகையில் கமலஹாசன் நடத்தி வரும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும்' என்றார்.

Newsletter

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...