ஹூப்ளியில் இருந்து கோவைக்கு சேவையாற்றிய கங்கா மருத்துவமனையின் பறக்கும் ஆம்புலன்ஸ்

கோவை கங்கா மருத்துவமனையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு பறக்கும் ஆம்புலன்ஸ் சேவை அறிமுகம் செய்யப்பட்டது. உலகத்தரம் வாய்ந்த இந்த சேவைக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். 

மேலும், தமிழகத்தில் கோவையில் இதுவே முதன் முறையாகும் என்பதால் அதிகப்படியான வரவேற்பை இந்த அம்புலன்ஸ் சேவை பெற்றது. இந்த சேவை துவங்கப்பட்ட நாள் முதல் தற்போது வரை ஆறு நோயாளிகள் பயனடைந்துள்ளனர்.

இதனிடையே, ஹூப்ளியில் காயம் மற்றும் பாலித்ராமா என்னும் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த இளம் அனஸ்தியாலஜிஸ்ட் கங்கா மருத்துவமனையின் ஏர் ஆம்புலன்ஸ் சேவை மூலம் கோவைக்கு அழைத்து வரப்பட்டார்.

பொதுவாக, பிற ஏர் அம்புலன்ஸ் சேவை மூலம் ஹூப்ளியில் இருந்து கோவை வர நீண்ட நேரம் மற்றும் 6 லட்சம் ரூபாய் வரை தொகை செலுத்த வேண்டும். ஆனால், கங்கா மருத்துவமனையின் இந்த சேவையில் நோயாளி 2.45 மணி நேரத்தில் கோவை வந்தடைந்தார். மேலும், மானியம் உள்ளிட்ட சலுகைகளின் அடிப்படையில் இச்சேவைக்கு 3 லட்சம் ரூபாய் வசூலிக்கப்படவுள்ளது என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...

40 ஆண்டு கால TNHB நில கையகப்படுத்தல் பிரச்சனை: விவசாயிகள் சங்கம் குறைதீர்ப்பு நாளில் மனு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நில ஆர்ஜித நடவடிக்கைகளால் 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வரும் சிறு, குறு விவசாயிகள் மற்ற...

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...