வாய்ஸ் ஃபார் லைப் பெடேரேஷன் அறக்கட்டளையின் தொடக்க விழா மற்றும் புத்தக வெளியீட்டு விழா

கோவை ஆர்.எஸ் புரத்தில் உள்ள புறந்தரதாசர் மண்டபத்தில் வாய்ஸ் ஃபார் லைப் பெடேரேஷன் அறக்கட்டளையின் தொடக்க விழா நடைபெற்றது. அறக்கட்டளையின் அறங்காவலர் பேராசிரியர் ராஜசேகர் மற்றும் சிவக்குமார் ஆகியோர் விழாவினை துவக்கிவைத்தனர். விழாவில், எம்.ஏ.கே குரூப் தலைவர் அத்தப்ப மாணிக்கம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். 



விழாவில், முக்கிய நிகழ்வாக முதலில் குழந்தைகளுக்கு ஊக்கத்தொகையும் பின்பு நாளைய வரலாறு மற்றும் ஜன்னலில் வெளிவந்த ஆசிரியை பா.பிரபாவதி அவர்களின் குறுநகை பூக்கள் புத்தகம் வெளியிடப்பட்டது. அதனை எம்.ஏ.கே குரூப் தலைவர் அத்தப்ப மாணிக்கம் வெளியிட, சமூக ஆர்வலர் இளங்கோ பெற்றுக்கொண்டார். அடுத்தாக சமூக ஆர்வலர் மற்றும் ஆசிரியரான ரா.கனகராஜ்-யின் காணிக்கை புத்தகம் வெளியிடப்பட்டது. இதனை தன்னம்பிக்கை கவிஞர் கவிதாசன் வெளியிட, எம்.ஏ.கே குரூப் தலைவர் அத்தப்ப மாணிக்கம் மற்றும் பெரியமணி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். பின்னர் இளம் சாதனையாளர்களுக்கான விருதை ஜகதீஷ்க்கு வழங்கப்பட்டது.



விழாவில், சிறப்பு விருந்தினரான எம்.ஏ.கே குரூப் தலைவர் அத்தப்ப மாணிக்கம் பேசுகையில், அடித்தட்டு மக்களுக்கு சுகாதாரமான மருத்துவம், அத்தியாவசியமான கல்வி மற்றும் அடிப்படை வசதிகள் கிடைத்திட வாய்ஸ் ஃபார் லைப் பெடேரேஷன் அறக்கட்டளையும் உதவவேண்டுமென வந்த அனைவரையும் வியக்கும்படி பேசினார். இறுதியில் அறங்காவலர் பேராசிரியர் ராஜசேகர் நன்றியுரை வழங்கினார்.

Newsletter

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...