40 ஆண்டுகளுக்கும் மேலாக பொது வாழ்வில் பல்வேறு பரிமாணங்களில் பணியாற்றியவர் வெங்கைய நாயுடு- புதிய தமிழகம் கட்சி டாக்டர் கிருஷ்ணசாமி

இந்திய துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக போட்டியிடும் பாஜக வேட்பாளர் வெங்கையா நாயுடு ஆளும்கட்சி மற்றும் எதிர்க் கட்சியாக இருந்தபோது அனைத்து தரப்பினரையும் தனது பேச்சுத் திறனால் கவர்ந்தவர் என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி பேட்டி அளித்தார்.

மேலும், புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி கூறியதாவது:-

வெங்கையா நாயுடு விவசாய குடும்பத்தை சார்ந்தவர். மக்கள் பிரச்சனைகளை நன்கு அறிந்தவர். அவர் வெற்றி பெற வேண்டும். இதுவரை துணை ஜனாதிபதியாக இருந்தவர்கள் அனைவருமே அரசியலில் இல்லாதவர்களாக இருந்திருக்கிறார்கள். வெங்கையா நாயுடு தற்போது பொருப்பில் இருப்பதாலும் தினந்தோறும் மக்களையும் செய்தியாளர்களையும் சந்தித்து வருபவர் என்பதால் ஆக்கமும் செயல்பாடும் அதிகளவில் இருக்கும். 

மேலும், வெங்கையா நாயுடுவுக்கு தமிழகத்தை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும் தென்னிந்தியாவில் இருப்பவர்கள் அனைவரும் பெரும் ஆதரவு தந்து அவரை வெற்றி அடைய செய்யவேண்டும். தமிழகத்தில் கடந்த நான்கைந்து மாதங்களாகவே மணல் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்பு மணல் விற்பனையை அரசே ஏற்று நடத்தும் என கூறி ஆன்லைனில் விற்பனை செய்ய முன்வந்தது வரவேற்கத்தக்கது. முறைகேடுகள் அதிகளவில் நடப்பதாக புகார்கள் வருவது வருத்தமளிக்கிறது. அரசின் நோக்கம் இதுவரை நடைமுறைக்கு வரவில்லை. ஏழை எளியோர் வீடு கட்ட தட்டுப்பாடு இல்லாமல் ஓரிரு நாளில் மணல் கிடைக்கும் வகையில் மணல் விநியோகத்தை சீரமைக்க முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்தார்.

மேலும், கோவை, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு செல்ல கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு குறுகிய ரயில் தடம் இருந்தது. பல ஆண்டுகளுக்கு பிறகு அகல ரயில் பாதை பணிகள் நிறைவடைந்து சோதனை ஓட்டம் நடைபெற்றும் கோவையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு இயக்கும் ரயில்கள் இயக்கபடாமல் இருப்பதால் தென் மாவட்ட மக்களுக்கு அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் குறிப்பாக பகல் நேரங்களிலும் இயக்க வேண்டும்.

இவ்வாறு புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி பேட்டி அளித்தார்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...